மத்தியப்பிரதேசத்தில் இன்று காலை நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் டிப்பர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கார் முற்றிலும் சேதமடைந்த நிலையில் காருக்குள் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.மேலும் பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு ரோவாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.